உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா நடந்த காட்சி.

உடன்குடி அருகே சுடலை மாடசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-30 14:15 IST   |   Update On 2023-06-30 14:15:00 IST
  • சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.
  • குழந்தைவரம் வேண்டி மற்றும் குழந்தைவரம் பெற்ற ஏராளமான தம்பதியினர் பொம்மைகளை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.

பல்வேறு நிகழ்ச்சிகள்

கும்பாபிஷேக விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமமம், ஆஸ்திர ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், தனபூஜை, கஜபூஜை, கன்யா பூஜை, கோபூஜை, கும்ப ஆலங்காரம், நான்கு கால யாகசாலை பூஜைகள், விசேஷ சாந்தி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்தர ஸ்தாபனம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடந்த 28-ந்தேதி காலை 6 மணிக்கு நாடி சந்தானம், நாமகரணம், ஹோமம், யாத்ரா தானதத்தை தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பட்டு ஆலமரத்து ஸ்ரீசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்க ளின் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

குழந்தைவரம்

குழந்தைவரம் வேண்டி மற்றும் குழந்தைவரம் பெற்ற ஏராளமான தம்பதியினர் பொம்மைகளை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பித்தனர். பிற்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபி ஷேக நிகழ்ச்சிகளை ஹரிஷ் பட்டர் நடத்தினார்.

நிகழ்ச்சிகளில் உடன்குடி பேரூராட்சிமன்றத் துணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஓன்றிக்குழு உறுப்பினர் ஜெய கமலா, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் சாரதா, தொழிலதிபர்கள் சகாதேவன், மால்முரளி, சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சிமன்றத் தலைவி கமலம், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News