உள்ளூர் செய்திகள்

கோவையில் பாம்பு கடித்து கூலி தொழிலாளி சாவு

Published On 2023-04-08 09:39 GMT   |   Update On 2023-04-08 09:39 GMT
  • செல்வராஜ் வலது கையில் பாம்பு கடித்து விட்டது.
  • கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கிணத்துக்கடவு அருகே சோலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55).கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்து விட்டது. இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News