உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மேதா தக்ஷிணாமூர்த்தி.

மயிலாடுதுறை, வள்ளலார்கோவிலில் லட்சார்ச்சனை

Published On 2023-03-31 15:12 IST   |   Update On 2023-03-31 15:12:00 IST
  • ரிஷப வாகனத்தில் அமர்ந்து குரு பகவானுக்கு லட்சார்ச்சனை.
  • தருமபுர ஆதீனம் அருளாசியுடன் நடைபெற்றது.

தரங்கம்பாடி:

குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

அதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் (வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி குரு பகவானுக்கு லட்சார்ச்சனை ஒவ்வொரு தினம் மாலையில் நடைபெற்றுவருகிறது.

இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைய தருமபுர ஆயுதம் 27ஆவது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெறுகிறது.

Tags:    

Similar News