உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம். 

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-24 15:23 IST   |   Update On 2023-03-24 15:23:00 IST
  • பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மதுரை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வந்தனர். இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர் பாக எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம், சுகாதார போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கல்யாண சுந்தரம், மணிகண்டன், பரஞ்சோதி, ராமசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் வாக்கு றுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News