உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2023-07-21 15:00 IST   |   Update On 2023-07-21 15:00:00 IST
  • தலைகவசம் அணியாமல் ஹெட்போன் பேசியபடி செல்கின்றன. இதனால் தொடர்ந்து பின்வரும் வாகனம் தெரியாமல் சந்திப்பு சாலையில் கவனிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது.
  • நகர்புறங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விதிமுகளை பின்பற்றாமல் செல்வது தொடர்கதையாகி விட்டது. தலைகவசம் அணியாமல் ஹெட்போன் பேசியபடி செல்கின்றன. இதனால் தொடர்ந்து பின்வரும் வாகனம் தெரியாமல் சந்திப்பு சாலையில் கவனிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது.போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதை அறிந்தால் வாகனங்கள் வேகமாக இயக்கி செல்கின்றன. அல்லது மாற்று வழியில் சென்று விடுகின்றன. விபத்துக்களை தவிர்க்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நகர்புறங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News