உள்ளூர் செய்திகள்
ஆத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
- சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது.
- இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழரசன் நகரை சேர்ந்தவர் மணி மகன் சதீஷ்(வயது 26). இவர் அதிகாலையில் இயற்கை உபாதையை கழிக்க அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது.
இதில் 500 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார், தகவல் அறிந்த ஆத்தூர் ரெயில்வே மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், அதிகாலையில் ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.