கவர்னர் வருகையை யொட்டி ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம்
- கடந்த 24-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைபிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட அத்துமீறல்களை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. இருந்தபோதி லும் மீனவர்கள் பிரச்சி னைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு மட்டும் எட்டப்படவில்லை.
கடந்த மாதம் 16-ந்தேதி ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
இந்தநிலையில் கடந்த வாரம் 2 நாட்களில் ராமேசு வரம் மீனவர்கள் 42 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்ட அவர்கள் வவு னியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தரையில் படுக்க கூட இடமில்லாமல் மிகவும் குறுகிய அறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் சரியான தூக்கம், உணவின்றி தவித்து வருவதாக கிடைத்த தகவல்கள் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 24-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக ராமேசு வரம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகி றார்கள். தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் முடங்கியுள்ளது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கச்சிமடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மீனவர்கள் பிரச்சி னைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் நேற்று அழைத்திருந்தார். அதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், மத்திய மந்திரி நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.
அத்துடன் 6 மாதம், ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் போது அவற்றை செலுத்த முடியாத மீனவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே இலங்கை கோர்ட்டு விதிக்கும் அபராத தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும், 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர்.
இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, ஏலத்தில் விட்டு படகுகளை உடைப்பது, அதில் இருக்கும் இரும்பு களை ஏற்றுமதி செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அதிகப்படியான அபதாரங்களை விதித்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவது, அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெறும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ராமேசுவரம் வருகை தருகிறார். செம்மமடம் பகுதியில் தனியார் காப்பகத்தை புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே மீன வர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகி றது. அதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.