மயிலத்தில் பரபரப்பு: அரசு பஸ் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
- பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
- டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து நேற்று மாலை திருவக்கரைக்கு சென்ற, தடம் எண் 12என்ற எண் கொண்ட அரசு பஸ், மீண்டும் திருவக்கரையிலிருந்து பயணிகளை ஏற்றி க்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்எ ன்பவர் ஓட்டி சென்றார். அப்போது மயிலம் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அரசு பஸ் மீது மோதுவது போல் கட்டடித்து சென்றுள்ளனர். இதனால் பஸ் டிரைவர் அவர்களிடம் எதற்காக இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில், பைக்கில் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மயிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது ரமேஷ் உட்பட 3 பேர் பஸ்சை மோதுவது போல் வந்து டிரைவரை தாக்கி விட்டு, ஓடி விட்டதாக தெரிவி த்தனர். இதனையடுத்து ரமேஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.