உள்ளூர் செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் தொடர்பாக திட்டமிடல் கூட்டம்

Published On 2023-10-15 14:29 IST   |   Update On 2023-10-15 14:29:00 IST
  • மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்லூரி களப்பயணம் தொடர்பாக முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் - கல்லூரி களப்பயணம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் , மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர்கள், போக்குவரத்து துறை அலுவலர், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கருத்தாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு கல்வி பெல்லோஸ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் செய்திருந்தார்.

Tags:    

Similar News