உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி கிணறு, குவாரி குழிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

Published On 2023-08-12 11:41 IST   |   Update On 2023-08-12 11:41:00 IST
  • கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

தேனி:

தேனி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள். திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்க ளின் விரிவான பதிவைப் பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்ட ப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிணறுகள், உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

மேலும், சாலையோர ங்களில் உள்ள கால்வாய்க ளில், சாலை பயன்பாட்டா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலையோரங்களில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு ஒட்டுனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

இந்த பாதுகாப்பு நட வடிக்கைகளை செயல்படு த்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்பு களுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News