உள்ளூர் செய்திகள்

லாரி மோதி மின்கம்பம் சேதம்

Published On 2022-11-05 09:14 GMT   |   Update On 2022-11-05 09:14 GMT
  • லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது.
  • வீடுகளில் மின் தடை ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து குளந்திரான்பட்டு செல்லும் சாலையில் தனியார் சிமெண்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் விற்பனை நிலையத்திற்கு கரூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது குளந்திரான்பட்டு நரங்கியப்பட்டு செல்லும் சாலையில் லாரி சென்ற போது அந்த சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத் தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அபுதாஹிர் உயிர் தப்பினார். ' இந்நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. உடைந்த மின் கம்பத்தை மாற் றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News