உள்ளூர் செய்திகள்

சைகை மொழி தினம் காது கேளாதோர் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-26 15:26 IST   |   Update On 2023-09-26 15:26:00 IST
  • வாய் பேசாத குழந்தைகளிடம் கருத்துரை வழங்கினார்.
  • பேரணியில் தொழிலதிபர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவோணம்:

ஒரத்தநாட்டில் சர்வதேச காது கேளாதோர் தின சைகை மொழிக்கான சர்வதேச நாள் பேரணி நடைபெற்றது.

அண்ணா சிலையில் இருந்து தொட ங்கிய பேரணியை ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

சர்வதேச காது கேளாதோர் உரிமைகள் பிரகடனம் குறித்து ஒரத்தநாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாரதா, வாய் பேசாத குழந்தைகளிடம் கருத்துரை வழங்கினார்.

இந்தப் பேரணியில் காது கேளாத குழந்தைகளின் சைகை மொழி வழிநடத்தலை ராகவி, வழங்கினார்.

பேரணியை காது கேளாதோர் அமைப்பின் தலைவர் விவேக், செயலாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் முன்னின்று நடத்தினர்.

இந்த பேரணியில் தொழிலதிபர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News