உள்ளூர் செய்திகள்
பொது மருத்துவ முகாம்- தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்
- முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
- கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.
கண் மருத்துவர் டாக்டர் குமார் பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.
முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை பிஆர்ஓ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.