உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு: 3-வது நீதிபதிக்கு பரிந்துரை

Published On 2023-07-04 10:58 IST   |   Update On 2023-07-04 11:12:00 IST
  • மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார்.
  • மருத்துவ ரீதியாக தகுதி பெற்றபின்உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்றபின் உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கில் 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News