உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்து கிடக்கும் டிராக்டர்.

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி நசுங்கி சாவு

Published On 2022-11-18 15:02 IST   |   Update On 2022-11-18 15:02:00 IST
  • சொந்த டிராக்டர் வைத்து உழவு ஓட்டி வருகிறார்.
  • வெங்கடசாமி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செல்லானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 46). . இவருக்கு திருமணம் ஆகி சரிதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சரிதா ஏரியூர் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். வெங்கடசாமி விவசாயம் செய்து கொண்டு சொந்த டிராக்டர் வைத்து உழவு ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்ட பள்ளத்தில் உள்ள தொட்டான் என்பவரின் நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து அதன் அடியில் சிக்கிய வெங்கடசாமி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News