திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
- இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது
- 14 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்
வேங்கிக்கால்:
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச லேஸ்வரரை வலம் வந்து வழிபட்டனர்.
புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 6.41 மணிக்கு தொடங்கி இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.
அரசு விடுமுறை தினம் என்பதால் கடந்த மாத பவுர்ணமியை காட்டிலும் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.
காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து வழிபட்டனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் தினமும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை இல்லாததால் பக்தர்கள் சிரமம் இன்றி கிரிவலம் வந்தனர்.
அருணாசலேசுவரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்து றையினர் ஈடுபட்டனர்.