உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நாக வாகனத்தில் அம்மன் வீதி உலா

Published On 2023-08-13 08:38 GMT   |   Update On 2023-08-13 08:38 GMT
  • மகாதீபாராதணை நடைபெற்றது
  • கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று 4-ம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகாதீபாராதணை நடைபெற்றது.

பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள், முன்னாள் எம் எல் ஏ பன்னீர்செல்வம், ஆரணி ஜோதிடர் குமரேசன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் தந்தனர்.

கோயில் சார்பில் கணேஷ் சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினார். மாலையில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. இரவில் நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் மாடவீதி உலா நடைபெற்றது.

ஊர்வலத்தில் கரகாட்டம், நையாண்டி மேளதா ளத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News