ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டைஅணிந்து ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
ஒருங் கிணைப்பாளர் கே.எம்.நேரு தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கி ணைப்பாளர் ராஜா தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை விதித்தும், முறை யான திட்டமிடல் இன்றி திட்டப் பணிகளை நடை முறைப்படுத்தி ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இதல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், வசந்தி, மாலதி உள்படபலர் கலந்து கொண்டனர்.