உள்ளூர் செய்திகள்

கெட்டுப்போன சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.

கெட்டுப்போன உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2023-03-02 04:47 GMT   |   Update On 2023-03-02 04:47 GMT
  • காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
  • குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது.

திருப்பூர் :

திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா சந்திப்பு அருகே செயல்படும் ஒரு பேக்கரியுடன் கூடிய உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குளிர்பானங்கள், தின்பண்டங்கள் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் சோதனை செய்தனர். குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சமைத்த அசைவ உணவு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுகிறதா? காலாவதி உணவுப் பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த கெட்டுப்போன 2 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாபபுத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது, இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News