உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

Published On 2023-07-05 14:44 IST   |   Update On 2023-07-05 14:44:00 IST
  • 2 பேர் கைது
  • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா போலீசார் நேற்று இறைவன்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இறைவன்காடு பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 48), கல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பதும், இவர்கள் அனுமதி இன்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News