உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர்

Published On 2023-06-03 12:54 IST   |   Update On 2023-06-03 12:54:00 IST
  • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
  • பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

அயன்கரிசல்குளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் மயான சாலை, அசரப்பட்டியில் ரூ.1.99 லட்சம் மதிப்பில் நடக்கும் நூலக கட்டிட பராமரிப்பு பணி, ரூ.2.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.9.578 லட்சம் மதிப்பில் நடக்கும் பட்டத்தரசியம்மன் ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், படித்துறை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இலந்தை குளம், ஆயர்தர்மம், மூவரை வென்றான் உள்ளிட்ட பகுதி களில் அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, செயற்பொறி யாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், உதவி பொறியாளர்கள் வள்ளிமையில், ஜெயா, ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News