உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்

Published On 2023-08-29 14:37 IST   |   Update On 2023-08-29 14:38:00 IST
  • சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
  • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காளம்பாளையம் சீலியூர் விநாயகர் கோவில் வீதியைச்சேர்ந்தவர் சின்னச்சாமி.இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 47). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று மருதூர் சந்தைக்கடை தோட்டத்தில் உள்ள சுகந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்டிரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள உடல் முழுவதும் படுகாயம் அடைந்தார். சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் மருதூர் சந்தைக்கடை தோட்டத்தைச்சேர்ந்த வீரபத்திரசாமி (54), அவரது மனைவி சுகந்தி (47) மீது காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

Similar News