உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

உலக அன்னாசி பழ தினம்

Published On 2023-06-29 14:57 IST   |   Update On 2023-06-29 14:57:00 IST
  • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.
  • மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார்.

பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்பு மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் வசந்தா அன்னாசி பழங்களை பரிசாக வழங்கினார்.

பின்னர் அன்னாசி பழத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து எடுத்து கூறப்பட்டன.

Tags:    

Similar News