உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-10-05 14:22 IST   |   Update On 2023-10-05 14:22:00 IST
  • கலைவாணிக்கு அஜித்குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
  • குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்தவர் கலைவாணி என்ற அம்மு(வயது 21). இவருக்கு ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மனவேதனையில் இருந்த கலைவாணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News