உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-05-27 08:58 GMT   |   Update On 2023-05-27 09:00 GMT
  • மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் மணிகண்டன்(வயது 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் சாலை பள்ளத்தில் விழுந்து சறுக்கியபடி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News