- பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான்.
- பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.
பூடான் நாட்டில் இருக்கும் லவ் முறையே வேறு. அதை பொமினா (Bomena) என அழைப்பார்கள்.
இந்த முறைப்படி முதலில் பையன் ஒரு பெண்ணுக்கு ரூட்டு விட வேண்டும். அவளும் கொஞ்சம் வெட்கபட்டு, சிக்னல் கொடுத்தால் போதும். பையன் பொமினாவுக்கு தயாராகிவிடுவான்.
இரவில் பெண் தூங்கும் அறைக்குள் அவன் எப்படியோ சாமர்த்தியமாக நுழைய வேண்டும். பல சமயம் பெண்ணே வீட்டில் சொல்லி, அவளது அறைகதவை பூட்டாமல் இருப்பது, ஜன்னலை பூட்டாமல் வைத்திருப்பதும் எல்லாம் உண்டு. பெற்றோரும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என சொல்லி பொமினாவுக்கு ஒத்துழைப்பார்கள்.
பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதும் உண்டு ஆக பையனின் திறமை இதில் இரவில் எப்படியாவது பெண்ணின் அறையில் நுழைவதுதான். உள்ளே போனால் ஒன்று அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்வாள். இல்லையெனில் "சும்மா நண்பன் மாதிரி நெனச்சு பேசினேன்.
நீ பொமினான்னு தப்பு கணக்கு போட்டுட்டு வந்துட்டியே" என எதாவது டயலாக் சொல்வாள்.
ஆனால் கத்தி ஊரை கூட்டுவது எல்லாம் கிடையாது. நோ சொன்னால் பையன் திரும்ப போயிடுவான். யெஸ் சொன்னால் அன்று தேன்நிலவுதான்.
இப்படி தினமும் இரவு பையன் வருவதும் போவதுமாக இருப்பான். ஒரே கண்டிசன் காலையில் பெண் வீட்டார் விழிக்கையில் பையன் ரூமில் இருக்ககூடாது. பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான். பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.
இதில் எல்லாமே ரகசியம் என்பதால் சாமர்த்தியமான வாலிபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொமினாவில் எல்லாம் இறங்குவது வழக்கம். ஆனால் பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கபடும். குழந்தையை வளர்க்க காசு கொடுக்கணும். கிராமப்புற கட்டுபாடும் அதிகம்.
20ம் நூற்றாண்டில் வெள்ளையர் வந்து இறங்கி, மேற்கத்தியமயம் சற்று பரவிய பின்னர் தான் இந்த வழக்கம் நின்றது.
- நியாண்டர் செல்வன்