- பலரும் அதிக காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம்.
- இஞ்சி டீ நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் பாதிக்கும் புற்றுநோய் நமது அலட்சியத்தாலும், நல்லது என நினைத்துக்கொண்டு சில உணவுகளை அல்லது பாக்கு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதும்கூட புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
எங்க வீட்டுல மஞ்சள், சீரகம், மிளகு இல்லாம சமையல் இல்லன்னு நம்ம மக்கள் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு செரிமான மண்டல புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கவலை தருகின்றன.
எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அஜினாமோட்டா மற்றும், சுவையூட்டிகள், செயற்கை உப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்பது அதிகரித்து வருகிறது. இன்றைக்கு பிரியாணி இல்லாத விருந்தே கிடையாது. பலரும் அதிக காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம்.
வறுத்த, பொரித்த, தந்தூரி வகை உணவுகளில் புற்று நோய் செல்களை தூண்டும் கார்சினோஜென் என்ற ரசாயனம் நிறைந்துள்ளது. நேரடியாக தீயில் சுட்டு எடுக்கப்படும் தந்தூரி உணவுகளில் இருந்து நைட்ரா சமைன் என்ற வேதிப்பொருள் வெளியாகிறது. அது புற்றுநோயை தூண்டக்கூடியது.
வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து போடலாம். ஆனால், வாய் நாற்றத்தைப் போக்கக்கூடியது என்பதால் அவ்வப்போது பாக்கு மெல்வது ஒருகட்டத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம்.
ஒருவர் தினமும் பாக்கு மெல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு நலக்குறைவு ஏற்பட மருத்துவரிடம் பரிசோதித்தபோது இதை இப்படியே விட்டிருந்தால் புற்றுநோயாகி இருக்குமென்று சொல்லியிருக்கிறார்.
தாம்பூலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாக்கை எந்நேரமும் வாயில்போட்டு மென்று கொண்டிருந்தால் அது பிரச்சனையை உண்டாக்கலாம்.
கைகாலில் அடிபட்டால் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலும் அது புற்று நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நிறைய சொல்லலாம். நாம் சரி என்று நினைத்துக்கொண்டு தவறான வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இஞ்சி டீ நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்து என்றாலும் அளவுக்கு அதிகமான நுகர்வு நெஞ்செரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு என்பார்கள். இஞ்சியும் அப்படியே..! ஆகவே நாம் உண்ணும் உணவு, அன்றாட வாழ்வியல் முறையை நாம் சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்க்க வேண்டியது அவசியம்.
அழகுபடுத்திக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கண்டதையும் வாங்கி முகத்தில் பூசிக்கொண்டால் என்னாகும்? ரசாயனங்கள் உடலில் படிந்து ஒருநாள் வீறுகொண்டு எழுந்து ஆளைக் கொல்லும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
-மரியபெல்சின்