இந்தியா
அசாமில் ஒரே நேரத்தில் 9000 பெண்கள் நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதை முன்னிட்டு கவுகாத்தியில் நடந்த ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி பங்கேற்றுள்ள விழாவில், ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி விழா மேடை நோக்கி வந்தபோது 9 ஆயிரம் பெண்களும் நடன அசைவுகளுடன் வரவேற்றனர்.