இந்தியா
மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அண்ணாமலை
- மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மகா கும்பமேளாவில் புனித நீராடி வழிபட்டார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், " பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில்!
உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவின் ஒரு பகுதியாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்றார்.