இந்தியா

சமையல் நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி: பெங்காலி நடிகைக்கு கொலை மிரட்டல்

Published On 2024-06-27 16:19 GMT   |   Update On 2024-06-27 16:19 GMT
  • மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும்.
  • நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.

பெங்காலி நடிகை சுதிபா சாட்டர்ஜி, வங்காளதேச சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த பங்கேற்பாளருடன் சுதீபா உரையாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் சுதிபா சாட்டர்ஜிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வங்காள அமைச்சர் பாபுல் சுப்ரியோவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த சுதிபா சாட்டர்ஜி, "என்னை ட்ரோல் செய்யும் பெரும்பாலானோர் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று நான் நம்புகிறேன். நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. மாட்டிறைச்சியை நான் தொட்டது கூட இல்லை.

கரீம் ஜஹான் (நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) சமையல் செய்த வீடியோக்கள் இன்னும் எடிட் செய்யப்படவில்லை. மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும். அதனால், நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.

இந்த வீடியோக்களை வைத்து மம்தா பானர்ஜி மற்றும் பாபுல் சுப்ரியோவை பலர் விமர்சித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமில்ல எந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை

பாஜகவின் பெயரிலும் பல மிரட்டல் செய்திகள் வருகின்றன. என்னை உயிருடன் எரித்துவிடுவோம் அல்லது என் மகனைக் கடத்துவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News