இந்தியா

மத்தியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது காங்கிரஸ்- பிரதமர் மோடி

Published On 2023-05-31 16:25 GMT   |   Update On 2023-05-31 16:25 GMT
  • நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.
  • காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும் என்றார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அஜ்மீர் நகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு 9 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்துள்ளது.

2014க்கு முன், ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர். முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது.

காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறார்களா? இல்லை. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம், இலவச மின்சாரம் முதல் மலிவான சமையல் எரிவாயு வரையிலான சமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக மாறியது. ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், அவர்களைப் பின்வாங்குவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.

இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்.

கடந்த திங்களன்று பல முயற்சிகளுக்கு பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்திய போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி, வளர்ச்சியைத் தடுக்கும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது.

இப்போது, உலகம் இந்தியாவைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்தியா தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக அருகில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.

ஆனால், பாஜக அரசு ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் திட்டத்தினை நாட்டில் அமல்படுத்தியதுடன், அவர்களுக்கு அரியர்ஸ் தொகையையும் வழங்கியது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தது. பிரதமருக்கு மேல் உச்சபட்ச அதிகாரம் ஒருவரிடம் இருந்தது. இளைஞர்களின் கண்முன்னே இருள் சூழ்ந்திருந்தது. இன்று இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News