அம்பேத்கர் அவமதிப்புக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம்: கார்கே அறிவிப்பு
- அமித் ஷாவை நீக்க வேபண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
- இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம்.
பாராளுமன்ற நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
* அமித் ஷாவை நீக்க வேபண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம்.
* அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவமதிப்பாக பேசிய விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ.க. விரும்புகிறது. அதனால் மற்ற விசயங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர்.
* நாங்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைவதை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி விட்டனர். நான் நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தேன்.
* இந்த விசயத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அம்பேத்கர் அவமதிப்புக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
* அமைதியாக நடந்து கொண்டிருந்த அவையில் இடையூறு ஏற்பட்டது. அதற்கான வேலைகளை பா.ஜக. செய்தது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.