இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல்: பின்னடைவை தொடர்ந்து முன்னிலை பெற்ற கெஜ்ரிவால், அதிஷி

Published On 2025-02-08 10:17 IST   |   Update On 2025-02-08 10:20:00 IST
  • பாஜக 41 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
  • அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர்.

டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போதுவரை பாஜக 42 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர். பின்னர் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்

Tags:    

Similar News