இந்தியா
null

தமிழக நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் Reusable ராக்கெட் - நாளை வானில் பாய்கிறது

Published On 2024-08-23 05:19 GMT   |   Update On 2024-08-23 08:10 GMT
  • 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாகியுள்ளது.
  • தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா இதை உருவாகியுள்ள்ளது

இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா [Space Zone India ] மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாகியுள்ளது.

 

 இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டி நாளை மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து காலை 7 மணியளவில் லான்சர் மூலம் வானில் ஏவப்பட்ட உள்ளது. 3.50 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 

Tags:    

Similar News