வணிகம் & தங்கம் விலை
null

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்த முதலீட்டாளர்கள்

Published On 2025-02-15 11:15 IST   |   Update On 2025-02-19 17:23:00 IST
  • கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
  • அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 5 அன்று ரூ.42,80,3611.66 கோடியாக இருந்த மொத்த சந்தை மூலதனம், அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில் சரிவுக்கு பிறகு இப்போது ரூ.40,09,9281.11 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சந்தை ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளது. கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.

தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

Tags:    

Similar News