இந்தியா

சந்திரபாபு நாயுடுவிடம் உதவி கேட்கும் மும்பை நடிகை

Published On 2024-08-29 04:57 GMT   |   Update On 2024-08-29 04:57 GMT
  • விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.
  • 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

திருப்பதி:

மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காதம்பரி ஜெத்வாணி. இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,:-

கடந்த ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு எதிராக போலீசில் புகார் செய்தோம்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நெருங்கிய நண்பரான ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குக்கல வித்யாசாகரை தொடர்பு கொண்டு எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து குக்கல வித்தியா சாகர் காதம்பரி ஜெத்வாணியின் செல்போனுக்கு வீடியோ காலில் ஆபாசமாக நின்று தொல்லை கொடுத்தார். பின்னர் விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.

போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி மும்பைக்கு வந்தனர். எனது குடும்பத்தினரை சர்வதேச குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை போல் விமானத்தில் விஜயவாடாவிற்கு அழைத்து வந்தனர்.

இப்ராகிம் பட்டினத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைத்து 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

எனது பெயரில் உள்ள சொத்து மற்றும் 18 வங்கி கணக்கில் இருந்த ரூ. 80 லட்சம் என ரூ. 6 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறித்துக் கொண்டனர்.

பின்னர் எங்களை ஜெயிலில் அடைத்தனர். 48 நாட்களுக்கு பிறகு நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தோம்.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

தற்போது முதல் மந்திரியாக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News