இந்தியா

பெண் மருத்துவர் கொலை: காட்டமான கருத்து தெரிவித்த பரினீதி சோப்ரா

Published On 2024-08-15 01:29 GMT   |   Update On 2024-08-15 01:29 GMT
  • பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
  • உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.


 

இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு பிரபல நடிகை பரினீதி சோப்ரா காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களுக்கு படிப்பதற்கு அத்தனை கடினமாக இருந்தால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள்? அருவருப்பாகவும், பயங்கரமாகவும் உள்ளது. அவனை அவனது அந்தரங்க உறுப்பில் தொங்கவிட்டு கொன்றுவிடுங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News