இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2025-02-17 01:30 IST   |   Update On 2025-02-17 01:30:00 IST
  • டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
  • பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்று திரும்பியுள்ளார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News