இந்தியா
பிரதமர் மோடி அடுத்த மாதம் மொரீஷியஸ் பயணம்
- மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.
1968-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை குறிக்கும் வகையில் மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி நடைபெற உள்ள 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது எனது அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி நமது தேசிய தின விழாவில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் போர்ட் லூயிஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.