திருவண்ணாமலை அருகே புதுச்சேரி ரவுடி கொலையில் 15 பேரிடம் விசாரணை
- வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேங்கிக்கால்:
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ஐயப்பன். பிரபல ரவுடி. இவர் நேற்று திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் கொலை சம்பந்தமாக சுமார் புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலை சம்பவத்திற்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஏன் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பின்பு தெரிய வரும்.
இந்த கொலை சம்பவம் நடந்த ஏரி பகுதியில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், இந்த சூதாட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.