கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி, அதிரடி தொடக்க வீரர் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு
- மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- ஷார்ட்க்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாய்:
8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு 9-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.