கிரிக்கெட் (Cricket)

பிசிசிஐ விருது: ஷசாங்க் சிங், தனுஷ் கோட்டியானுக்கு லாலா அமர்நாத் விருது

Published On 2025-02-01 22:00 IST   |   Update On 2025-02-01 22:00:00 IST
  • ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்து வருகிறது.
  • உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருது ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின் சிற்ந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' தனுஷ் கோட்டியானுக்கும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News