சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மழை பெய்தால்.. ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?
- மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.
- ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
இருப்பினும் இயற்கையை யாராலும் துல்லியமாக கணித்து விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்..!
போட்டி நடைபெறும் நாளன்று (9-ம் தேதி) மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும். ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.