கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
- இந்திய அணி முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- பாகிஸ்தான் அணியை வீழ்த்து இந்தியா அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீசுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை வீழ்த்து அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.