ஐ.பி.எல்.

ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு 2 ஆண்டு தடை

Published On 2025-03-14 01:46 IST   |   Update On 2025-03-14 01:46:00 IST
  • ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
  • நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார்.

மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24-ம் தேதி நடக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.

இதற்கிடையே, நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டு தடை விதித்துள்ளது. ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனாலேயே அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News