விளையாட்டு (Sports)

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை ஏமாற்றம்

Published On 2024-08-30 09:20 GMT   |   Update On 2024-08-30 09:20 GMT
  • பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்தியா சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் SL3 பெண்கள் பிரிவில் இந்தியாவின் மந்தீப் கவுர், நைஜீரியாவின் மரியன் எனியோலா போலாஜியுடன் மோதினார்.

சுமார் 29 நிமிடங்களில் முடிந்த இந்தப் போட்டியில் மந்தீப் கவுர் 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

மந்தீப் கவுர் அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை செலின் வினோட்டுடன் மோத உள்ளார்.

Tags:    

Similar News