தமிழ்நாடு

நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும்- இபிஎஸை சாடிய மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-19 05:48 GMT   |   Update On 2024-08-19 06:00 GMT
  • கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
  • அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

சென்னை:

திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

* நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ்-க்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும்.

* ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்.

* எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும்.

* இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.

* அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம் பெற செய்தார்.

* ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா?

* இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

* இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.

* சங்கரை போல் எனக்கும் கோபம் வரும், ஆனால் கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்

* அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News