தமிழ்நாடு

பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 500 கன அடியாக குறைந்தது

Published On 2023-09-30 15:03 IST   |   Update On 2023-09-30 15:03:00 IST
  • கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
  • பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.

திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 25-ந்தேதி ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது.

இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 27-ந்தேதி 2500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தற்போது 1000 கன அடியாக குறைந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News