தமிழ்நாடு

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-10-22 11:38 IST   |   Update On 2022-10-22 11:39:00 IST
  • தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை சிறப்பு பெற்றது.
  • நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.

எட்டயபுரம்:

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை சிறப்பு பெற்றது.

வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.

வழக்கமாக வாரம் தோறும் ரூ. 2 கோடி வரையிலும், பண்டிகை காலங்களில் ரூ. 4 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களை கட்டியது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.

ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப இளம் ஆடுகள் அதிகளவில் இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

கடந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு ரூ. 7 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News