தமிழ்நாடு (Tamil Nadu)

தாலிய வச்சு கட்சி நடத்துனீங்களா? - அதிருப்தியாளர்களுக்கு சீமான் கேள்வி

Published On 2024-10-03 09:07 GMT   |   Update On 2024-10-03 09:07 GMT
  • கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
  • திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சீமானிடம் நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும்... திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை. பொது வெளியில் பேசினால் பேசட்டும். தாலியை வச்சி கட்சி நடத்துனேன்னு சொல்லுறவங்க, யாராவது ஒருத்தர எங்கிட்ட கூட்டிட்டு வாங்க.. குற்றச்சாட்ட சொன்னவரு யாரு? கட்சி பேரை சொல்லி 5 கோடி வசூல் பண்ணியிருக்காரு. என் முகத்துக்காக எல்லாரும் வழக்கு கொடுக்காம இருக்காங்க. அதை பற்றி பேசினால் எனக்கு தகுதியா இருக்குமா? தரமா இருக்குமா? வளர்ந்து வரும் கட்சியில சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை ஒரு பெரிய பிரச்சனையா பேசிக்கிட்டு இருக்காதீங்க என்றார்.

Tags:    

Similar News